Store
  Store
  Store
  Store
  Store
  Store

காக்கையின் அழுகை.....!

 



காக்கையின் அழுகை.....!
பறந்து வந்த பாதை எல்லாம்
கானல் தெரியுது
சிறகு இரண்டும் சோர்ந்து விழுந்து
நெஞ்சில் அறையிது,
மரங்கள் இல்லை
செடிகள் இல்லை
கொடிகள் இல்லையே
இளைப்பாறி செல்வதற்கு
நிழலும் இல்லையே
உயர்ந்து வளர்ந்த மரங்கள் எங்கே
கூடு கட்ட வே?
குளுமையான வனங்கள் எங்கே
கொஞ்சி மகிழவே?
முட்டையிட்டால் அடைகாக்க
எங்கே போவது?
குஞ்சு வந்தால் இரை கொடுக்க
என்ன செய்வது?
குளத்துக்குள்ளே குதித்து விழுந்து
நீச்சலடிப்போம்
வாய்க்கால் ஒரம் அமர்ந்து கொண்டு
இறகு துவட்டுவோம்
பச்சைப் புல்லின் மீது வந்து
தவளை பிடிப்போம்
தாவி வரும் நாய்க் குட்டிக்கு
போக்கு காட்டுவோம்
புழுவும் இல்லை பூச்சி இல்லை
தழைகள் இல்லையே
புழுதியிலே கொத்தி எடுக்க
எலிகள் இல்லையே
கல்லு போட்டு நீர் குடிக்க
பானை இல்லையே
பாவி மனுஷன் குழாயில
தண்ணி இல்லையே

குருஜி

Contact Form

Name

Email *

Message *