Store
  Store
  Store
  Store
  Store
  Store

உதிரமும் சதையுமாய் ஆனவன்

 


உதிரமும் சதையுமாய் ஆனவன்
மரத்தடி கட்டிலில் கிடக்கும்
வாலிபம் தவறிய கிழவன்
கரமும் சிரமும் நடுங்க
கடந்த பொழுதை நினைப்பான்
இருண்டு போன கண்ணில்
இனிய மகனையே நினைப்பான்
வரமாய் மகனிடம் கேட்பது
வாஞ்சை அழைப்பை அன்றோ
குப்பியில் இல்லாத தைலம்
குப்புற கவிழ்வது போல
அப்பன் இல்லாத குடும்பம்
அடித்தளம் இன்றி சரியும்
தப்பு செய்தால் திருத்த
தலைவன் வேண்டும் அன்றோ
ஒப்புக் கொள்ள மறுத்தால்
உலகம் உன்னை சபிக்கும்
சட்டை வேட்டி மோதிரம்
தருவது அப்பன் அன்றோ
கெட்டிக் காரன் பட்டம்
கிடைப்பதும் அவனால் அன்றோ
பட்டு மெத்தை பதவி
பகட்டும் தருவது அப்பன்
கெட்டுப் போனால் உடனே
கட்டிப் பிடிப்பவன் அப்பன்
தேரும் திருவிழா பார்க்க
தோள்களில் உன்னை சுமப்பான்
ஊறும் நோய்தனை விரட்ட
விழித்து இருந்து காப்பான்
பாரும் மக்களும் போற்ற
பட்டினி கிடந்து கொடுப்பான்
நீரும் நெருப்பும் தொடாமல்
நெருங்கும் உறுப்பாய் இருப்பான்
உதிரம் சதையும் தருவதும்
உயர்த்தி பார்த்து மகிழ்வதும்
விதியை வெல்ல வைப்பதும்
உனது அப்பன் தானே
நதிக்கு பாதை அமைத்து
நடக்க சொன்ன அவனை
மதியால் மனதால் மறந்தால்
மனித தர்மமும் சாகும்
குருஐி

Contact Form

Name

Email *

Message *