Store
  Store
  Store
  Store
  Store
  Store

கனியோ மலரோ கண்ணே

 



கனியோ மலரோ கண்ணே
உருண்டு விழுந்த திராட்சை பழங்கள் - உன்
கருவிழியானது
செழுமை மிகுந்த மாங்கனிகள் உனது
கன்னங்கள் என்றது
கோவை பழமும் கொவ்வை இதழும்
ஓரினம் என்றது
செவ்வாழைப் பழத்தின் இனிமை உந்தன்
கழுத்தில் மின்னுது
உன் பாதம் படவே பாரிஜாதம்
பாதையில் மலர்ந்தது
உன் புன்னகை கண்டு செவ்வந்தி பூக்கள்
சிதறிப் போனது
உன் விரல்கள் தீண்ட தாமரை மலர்கள்
தவத்தை செய்தது
உன் மூச்சிக் காற்றின் சுகந்தம் பெற்றே
மல்லிகை மணத்தது
வாழை இலைகள் வந்து உனக்கு
வியர்வை துடைத்தது
தாழை மடல்கள் சங்கம் அமைத்து
குடையாய் வந்தது
ஆலிலை உன்றன் வயிற்றை பார்த்து
நாணி குனிந்தது
மரிக்கொளுந்து உன் வாசனை நுகர்ந்து
மயக்கம் கொண்டது
பாஷைகள் எல்லாம் வரிசையில் வந்து
வர்ணனை செய்தது
ஆசைகள் அனைத்தும் ஒன்றாய் கூடி
ஆலயம் அமைத்தது
வீசும் காற்றில் உயிரும் கலந்து
உன் பாதம் விழுந்தது
பேசும் சித்திர தாரகைக் கொடியே
என் ஆன்மாவில் படர்ந்திடு

குருஜி

Contact Form

Name

Email *

Message *