கிளியே! வரம் வாங்கித் தா
பவளம் போன்ற மூக்கழகு
பார்க்கும் பார்வை தனியழகு
தவறு இல்லா சிறகழகு
தங்க கிளியே நீயழகு
கழுத்தில் வண்ண மாலையை
கடவுள் உனக்கு தந்தாரா?
அழகு பொங்கும் சொற்களை
அவரிடம் நீயே கற்றாயா?
தலையை ஆட்டி திருப்பாமல்
தானே பின்னால் பார்க்கின்றாய்
காலை எடுத்து கைபோல
கனிந்த பழத்தை தின்கின்றாய்
மதுரை அம்மன் தோள்மீது
மலரைப் போல இருக்கின்றாய்
இதமாய் அம்மன் அருளை நீ
எனக்கு வாங்கி தருவாயா ?
குருஜி