Store
  Store
  Store
  Store
  Store
  Store

கிளியே! வரம் வாங்கித் தா

 



கிளியே! வரம் வாங்கித் தா
பச்சைக் கிளியே பறந்துவா
பழங்கள் தாரேன் கொண்டுபோ
உச்சிக் கிளையில் தலைகீழாய்
ஊஞ்சல் ஆட சொல்லித்தா
பவளம் போன்ற மூக்கழகு
பார்க்கும் பார்வை தனியழகு
தவறு இல்லா சிறகழகு
தங்க கிளியே நீயழகு
கழுத்தில் வண்ண மாலையை
கடவுள் உனக்கு தந்தாரா?
அழகு பொங்கும் சொற்களை
அவரிடம் நீயே கற்றாயா?
தலையை ஆட்டி திருப்பாமல்
தானே பின்னால் பார்க்கின்றாய்
காலை எடுத்து கைபோல
கனிந்த பழத்தை தின்கின்றாய்
மதுரை அம்மன் தோள்மீது
மலரைப் போல இருக்கின்றாய்
இதமாய் அம்மன் அருளை நீ
எனக்கு வாங்கி தருவாயா ?

குருஜி

Contact Form

Name

Email *

Message *