மனிதனாய் பிறக்க ஆசைப்படு"
பிள்ளையாய் நீ இருந்தும்
தாலாட்ட யாருமில்லை
பாலூட்டி சீராட்ட
அழுதாலும் விழுந்தாலும்
நீயேதான் எழவேண்டும்
பசித்தாலும் தளர்ந்தாலும்
நீயே உனக்கு சோறுட்ட வேண்டும்
கழுத்தைக் கட்டி ஆட
எனக்கு அப்பன் உண்டு
கையால் அணைத்துக் கொள்ள
எனக்கு அம்மை உண்டு
நடக்க சொல்லித் தர
எனக்கு அண்ணன் உண்டு
குதித்து கும்மாளம் போட
எனக்கு தம்பி உண்டு
யாரும் இல்லை உனக்கு
ஏதும் இல்லை துணைக்கு
வணங்குதலை கண்டு கண்டு
கண் வலிக்குமே
போற்றுதலை கேட்டு கேட்டு
செவிகள் நோகுமே
வேண்டுதலை வாங்கி வாங்கி
கரங்கள் வீங்குமே
சரணடைந்தவர் தலைகள் மோதி
பாதம் சிவக்குமே
கடவுளாக இருப்பது
கசக்கும் அனுபவம் தானே
கோடி கோடி ஜீவன்களை
சுமப்பது பெரிய பாரம் தானே
ஜனனம் மரணம் தொடர்ந்து கொடுப்பது
மனதில் சலிப்பு தானே
அதனால் மனிதனாய் வந்து விடு
மகிழ்வு கிடைக்கும் தானே
குருஜி